கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு – கோரிக்கைகள் ஏற்பு!

0
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு - கோரிக்கைகள் ஏற்பு!
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு - கோரிக்கைகள் ஏற்பு!
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு – கோரிக்கைகள் ஏற்பு!

நாடு முழுவதும் உள்ள 167 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 7 சதவிகித ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம்:

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தொடங்கப்பட்டு தான் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆகும். கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தயாரிப்புகளை பல தனியார் நிறுவனங்களின் போட்டிக்கு இடையில் சந்தைப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவே அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் அவர்களுக்கு உதவி செய்கிறது. 1935ல் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் 28 கூட்டுறவு சங்கங்களுடன் தனது சேவையைத் தொடங்கியது.

கயலை கண்டுகொள்ளாததால் தனத்தை எதிர்க்கும் மீனா, உதவி கேட்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

நாடு முழுவதும் 167 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 1.7.2018 முதல் 31.1.2020 வரை வழங்க வேண்டிய 19 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்து கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மக்கள் வாக்குகளுடன் காப்பாற்றப்பட்ட பிரியங்கா – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” முதல் ப்ரோமோ!

இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக பொது மேலாளர் லட்சுமி அனைத்து மண்டல மேலாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கழிப்பறை இல்லாத இடங்களில் பொது கழிப்பறை பயன்படுத்த ரூ.300 வழங்குவது குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோ-ஆப்டெக்ஸில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ரூ.800ம், துணை மண்டல மேலாளர், கண்காணிப்பாளர்களுக்கு ரூ.400, விற்பனை பணியாளர்களுக்கு ரூ.300 மாதாந்திர அலவன்சு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு 1.7.2018 முதல் 31.1.2020 வரை வழங்க வேண்டிய 19 மாத நிலுவை தொகையை கணக்கிட்டு, அதில், 50 சதவீதம் இம்மாத ஊதியத்துடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, 7 சதவீதம் ஊதிய உயர்வு மற்றும் 20 சதவீதம் வீட்டு வாடகை அலவன்சு உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நிலுவை தொகை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு கிடைக்கும்.

மேலும் அதே போன்று, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், குறைந்தபட்சம் மாதம் ரூ.500 முதல் ரூ.9 ஆயிரம் வரை தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொடர்ந்து ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!