அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் – சுட்டு தள்ளிய ராணுவம் ! அதிபர் பாராட்டு!
அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே சீனாவின் பலூன் ஒன்று பறந்துவந்த நிலையில் அதனை அமெரிக்கா ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினார்கள். அவர்களின் அந்த செயலுக்கு அமெரிக்கா அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
அதிபர் பாராட்டு:
அமெரிக்கா ராணுவத்திற்கு உட்பட்ட மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே சந்தேகத்திற்குரிய பலூன் ஒன்று பறந்து சென்றது. ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய பலூன் பறந்ததால், உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முயற்சி கை விடப்பட்டதாக ராணுவம் விளக்கம் கொடுத்தது.
சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் – முக்கிய அப்டேட் இதோ!!
மேலும் அந்த பலூனின் அசைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது . இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் பைடன் பேசுகையில், அந்த பலூன் பற்றி என்னிடம் கூறுகையில், அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி பென்டகனுக்கு உத்தரவிட்டேன். அவர்கள் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சுட்டு வீழ்த்தி இருக்கின்றனர்.
இந்த வேலையை சிறப்பாக செய்து முடித்த விமானிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். அதன் பின் சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அந்த பலூன் குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட விண் ஓடம் ஆகும். வானிலை ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், திசைமாறி அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்து உள்ளது. அதற்கு தங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.