பொறியியல், மருத்துவ படிப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பிஹார் மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு:
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் வீடியோ முறை மாநாடு மாநில அதிகாரிகளுடன் நடைபெற்றது. அதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் லோகேஷ் குமார் சிங் அவர்கள் ‘பீகார் பொறியியல் பல்கலைக்கழக சட்டம் -2021’ மற்றும் ‘பல்கலைக்கழகங்களின் சக்தி மற்றும் செயல்பாடு, அதிகார வரம்பு மற்றும் பிற விதிகள்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையை வழங்கினார்.
TN Job “FB Group” Join Now
சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், பிரத்யயா அமிர்த், ‘பீகார் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகங்களின் சக்தி மற்றும் செயல்பாடு, அதிகார வரம்பு மற்றும் பிற விதிகள்’ என்ற தலைப்பில் அரசிடம் விரிவான அறிக்கையை வழங்கினார். மாநாட்டின் முடிவில் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் மாநில பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும், இதனால் பெண் மாணவர்களின் கற்றல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினார்.
கொரோனா 2 ஆம் அலையில் 624 மருத்துவர்கள் உயிரிழப்பு – IMA தகவல்!!
பெண்களுக்கு வழங்கப்படும் 33% இடஒதுக்கீட்டினால், அவர்கள் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை கற்பதற்கு ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என்றார். இதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருவதாகவும், பல மருத்துவக் கல்லூரிகள் முன்னதாக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!!
அரசின் இந்த மசோதாவை நிறைவேற்ற, பீகாரில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய பொறியியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு முயற்சித்து வருவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.