குழந்தைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!!
நாட்டில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிக அளவிலான கொரோனா பரவும் நிலை ஏற்பட்டுள்ள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்து மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா நோய்த்தொற்று மூன்றாம் அலையாக உருவெடுத்தால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள், மாவட்ட நீதிமன்றங்கள், காவல்துறை, பஞ்சாயத்து அமைப்பு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலையான பொறுப்புகளையும் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது இது குறித்து அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இந்த கடிதத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராம் மோகன் அவர்கள் அனுப்பியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த பேரிடர் காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க முன்களத்தில் இருப்பவர்கள் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.