கொரோனா 2 ஆம் அலையில் 624 மருத்துவர்கள் உயிரிழப்பு – IMA தகவல்!!
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையால் தாக்கப்பட்டு, இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தகவல் அளித்துள்ளது. அதில் அதிகபட்சமாக டெல்லியில் 109 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் கூறுகிறது.
மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா பரவலானது ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத பல கசப்பான நிகழ்வுகளை தந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பலர் வேலையையும், வருவாயையும், குடும்பத்தையும், சொந்தங்களையும் இழந்துள்ளனர். இதன் வடுவானது இன்றும் கூட மறையாமல் காணப்படுகிறது. இந்த நோய் தொற்று பரவ துவங்கிய காலகட்டத்தில், உயிர்கொல்லி நோய் என்று தெரிந்தும் மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள் மருத்துவர்கள்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவுக்கு எதிரான போரில் பலர் உயிரிழந்தாலும், மக்களுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தவர்கள் இவர்கள் தான். கடந்த ஆண்டு இந்தியாவில் உருவான இந்த பெருந்தொற்று மூலம் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா 2 ஆம் அலையின் போதும் இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ கழகம் தகவல் அளித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக டெல்லியில் மட்டும் 109 மருத்துவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!!
இதற்கு அடுத்ததாக பீகாரில் 96 மருத்துவர்களும், உத்திர பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சமாக கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 1 முதல் 3 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா 2 ஆம் அலை காரணமாக 21 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் (IMA) தகவல் அளித்துள்ளது. கொரோனா முதல் அலையை விட 2 ஆம் அலையால் குறைந்த அளவு மருத்துவர்கள் உயிரிழந்திருந்தாலும், அந்த பலியானது மிக குறுகிய காலத்திலே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.