தமிழக திருக்கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் – முதல்வர் தொடங்கி வைப்பு!
தமிழகத்தில் சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி ஆகிய திருக்கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அன்னதான திட்டம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து செய்து வருகிறது. தற்போது நடைபெற்ற துறைவாரியான விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் முக்கிய அறிவிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருகோயில்களில் பக்தர்கள் மொட்டையடிக்க கட்டணம் கிடையாது என்ற அறிவிப்புக்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நாட்டில் அதிகம் தடுப்பூசி செலுத்தி கொண்டது யார் – ஆண்களா? பெண்களா?
அதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகமே வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அனைத்து கோயிகளிலும் இங்கு மொட்டையடிக்க கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகராக விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆகம விதிகளின் படி பணி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக திருக்கோயில்களில் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!
சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும். தற்போது தமிழகத்தில் தளர்வுளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முழு தளர்வுகள் அறிவிக்கும் வரை உணவு பார்சலில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஸ்ரீரங்கம், பழனி ஆகிய இரண்டு கோயில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.