நாட்டில் அதிகம் தடுப்பூசி செலுத்தி கொண்டது யார் – ஆண்களா? பெண்களா?
இந்தியாவில் அதிகம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டது ஆண்களா? பெண்களா? என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் குறித்த தவறான பதிவுகளால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் கொண்டனர். அதன் பிறகு அரசின் விழிப்புணர்வால் மக்கள் தடுப்பூசிகளை செலுத்த ஆர்வம் காட்டினர். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!
தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளவர்கள் விரைவில் கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியை செலுத்தி கொண்டது ஆண்களா? பெண்களா?
என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுவரை நாட்டில் 76.09 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 39.89 கோடி பேர் ஆண்கள், 36.19 கோடி பேர் பெண்கள் ஆகும்.
இன்னும் 6 மாதங்களில் கொரோனா முடிவுக்கு வரும் – நோய்த்தடுப்பு மைய இயக்குநர் பேட்டி!
இந்த கணக்கெடுப்பின் படி நாட்டில் ஆண்களே அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதில் மிக குறைவான அளவில் திருநங்கைகள் உள்ளனர். இதனால் நாட்டில் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதால், இது குறித்து பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் கலந்தாலோசனை நடத்தி தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் பாலின வேறுபாட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.