அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற 'இது' கட்டாயம் - ஆளுநர் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற 'இது' கட்டாயம் - ஆளுநர் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் சற்று வேகமெடுத்து வரும் நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் இனி சம்பளம் பெற கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில அறிவுறுத்தல்களை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடைபெற்றது. 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சில இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 6 மாதங்களில் கொரோனா முடிவுக்கு வரும் – நோய்த்தடுப்பு மைய இயக்குநர் பேட்டி!

இந்நிலையில் அரசு ஊழியர்கள் இனி சம்பளம் பெற தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் கட்டாயம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் கிடைப்பதில் அரசு ஊழியர்களின் பங்கு அளப்பரியது என்பதால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியம். எனவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாதவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தால் இதில் விலக்கு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!

புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் பிறப்பித்து உள்ள உத்தரவில், தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தகுதியுள்ள அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!