பாரதிக்கு நலங்கு வைக்கும் கண்ணம்மா – வில்லி பரினாவின் சீமந்த நிகழ்ச்சி தருணங்கள்!
சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் சீமந்த விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சீரியல் பிரபலங்களாகிய அருண் மற்றும் ரோஷினி ஆகியோர் பரினாவுடன் செலவழித்த அழகிய தருணங்கள் புகைப்படங்களாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கட்டங்களுடன் நகர்ந்து வருகிறது. இதில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மையை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். அதிலும் குறிப்பாக ஹேமா தான் தனது 2ஆவது குழந்தை என்ற உறுதியான சந்தேகம் கண்ணம்மாவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் அவர் அவஸ்தை பட்டு வருகிறார். இதில் எப்போதும் கண்ணம்மாவை வெறுப்பேற்றும் வெண்பா, வழக்கம் போல 2ஆவது குழந்தை பற்றி தனக்கு தெரிவது போல காட்டிக்கொள்கிறார்.
அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!
இப்படி சண்டை சச்சரவாக நகர்ந்து வரும் திரைக்கதைக்கு மத்தியில் சீரியல் நடிகர்கள், நடிகைகள் நிஜத்தில் எப்போதும் நண்பர்களாக இருப்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை பரினா கர்ப்பமாக இருப்பதையடுத்து அவருக்கு வளைகாப்பு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண், ரோஷினி, ஸ்வீட்டி, அகிலன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இது தவிர படப்பிடிப்பு தளத்தில் பரினா செய்யும் அட்டகாசங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
இன்னும் 6 மாதங்களில் கொரோனா முடிவுக்கு வரும் – நோய்த்தடுப்பு மைய இயக்குநர் பேட்டி!
இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா அதாவது ரோஷினி மற்றும் அருண், நடிகை பரினாவின் சீமந்த விழாவை ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர். குறிப்பாக பரினாவுக்கு பூச வேண்டிய சந்தனத்தை ரோஷினி எடுத்து, அதை அருணுக்கு பூசுவது போன்றதொரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் பிரிந்திருந்த ஜோடியை ஒன்றாக பார்த்த மகிழ்ச்சியில் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.