சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
கொரோனா தாக்கத்தின் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோவில்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையினை தொடர்ந்து கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 30,570 பேருக்கு தொற்று! 431 பேர் பலி!
இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படும் என்றும் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் – இன்றைய எபிசோட்!
இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ள பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தற்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 21ம் தேதி வரை பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.