10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் – மார்ச் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
பொதுத்தேர்வுகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் கடந்த 15ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கான அறிவிப்பையும் அரசு முன்னதாகவே வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிப்ரவரி 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியது.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் – இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!!
காலஅவகாசம்:
இந்நிலையில் பிப்ரவரி 13ம் தேதிக்குள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ம் தேதிக்குள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ரூ.500 அபாரதத்துடன் மார்ச் 4ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மாணவர்கள் cgsos.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்களை பெற வேண்டும்.
கூடுதல் விடைத்தாள்:
கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 32 பக்கங்களை கொண்ட ஒரு விடைத்தாளும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 42 பக்கங்களை கொண்ட நீண்ட விடைத்தாள் கொடுக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்