தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் – இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!!
தமிழக பட்ஜெட்:
ஆண்டுதோறும் மாநிலத்தில் நிதியாண்டிற்குள் அரசுக்கு கிடைத்த வருவாய், செலவுகள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதிகள், ஒவ்வொரு துறை முன்னேற்றத்துக்கான நிதிஒதுக்கீடு மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி ஆகியவற்றிற்கான நிதிஒதுக்கீடு மற்றும் விவரங்களை சட்டசபையில் நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். அதன்படி, 2021-2022ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடந்தது.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்வின்றி தேர்ச்சி’ – மாநில அரசு திட்டம்!!
இடைக்கால பட்ஜெட்:
நடப்பு ஆண்டிற்கான இரண்டாம் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ள நிலையில் அ.தி.மு.க., அரசால் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவியது.
புதிய மருத்துவ கல்லூரிகள்:
இன்றைய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்காக ரூ.2,470 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1650 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கும் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்