1 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்வின்றி தேர்ச்சி’ – மாநில அரசு திட்டம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை நேரடியாக அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி செய்ய இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு வந்துளளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் – ஆசிரியர்கள் அதிருப்தி!!
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
ஜார்கண்ட் மாநில அரசு மார்ச் 1 ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் வரும் மே மாதத்தில் நடத்தப்படும். இந்நிலையில் 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தாமல் நேரடியாக அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த இறுதி முடிவுகளை ஜார்கண்ட் மாநில அரசு தான் எடுக்கும்.
அடிப்படை மதிப்பீடு:
இறுதி தேர்வுகளுக்கு பதிலாக மாணவர்களின் அடிப்படை மதிப்பீட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் புரிந்து கொண்டவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும், கடந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்கள் அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான பாடங்களை கார்டு கொள்ள முடியும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்