சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் இன்று சென்னையில் தங்க விலை அதிரடியாக குறைந்து உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிக குஷியில் உள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பிற்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதற்கு முக்கிய காரணம், சிக்கலின் போது நமக்கு தங்க நகைகள் கைகொடுக்கும் என்பதுதான். மேலும் உலக அளவிலான முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இருப்பினும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை ஆகிறது.