சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 38,552 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் நிலவி வந்த போரின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்து விட்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று புரட்டி போட்டது. மேலும் பல வார்த்தகங்களும் செயலில் இல்லாமல் போனது. இதில் மிகவும் முக்கியமானதாக ஆபரண தங்கம். சாதாரண நாட்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகை பிரியர்கள் நிறைய பெயர் நகை வாங்கி மகிழ்வர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை உக்ரைன் நாடு போரில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் தற்போது வரை தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
PF பென்ஷன் தொகை இருமடங்காக உயர்வு? ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்நிலையில் வெளிநாடுகளில் தங்கம் மற்றும் மற்ற ஆபரணங்கள் ஒரு வகையான முதலீடு மட்டும் தான். ஆனால் இந்தியாவில் மட்டுமே இதை அணிகலனாக அணிந்து மகிழ்ந்து வருகின்றனர். முக்கியமாக தங்கத்தின் ஆர்வம் கொண்ட மாநிலத்தில் நமது மாநிலமான தமிழ்நாடு மட்டுமே தற்போது வரை முன்னிலையில் இருந்து வருகிறது. சமீப காலமாக ஆபரண தங்கத்தின் விலை மிகவும் எகிறி கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையின் நிலவரத்தை பார்ப்போம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,819 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 38,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 38,552 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனை போல வெள்ளியின் விலையும் ரூ.72.80 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 72,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்