சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,016க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.160 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் தங்கத்தின் விலை சில ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதாவது, பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தான் தங்கத்தின் விலை உயருகிறது. மேலும், தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். அதாவது, வங்கிகளில் பணம் சேமிப்பதை காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் தருவதாகவும் எண்ணுகின்றனர். அதாவது, நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயருவதால் நல்ல லாபம் கிடைப்பதாக எண்ணுகின்றனர்.
Exams Daily Mobile App Download
கடந்த சில நாட்களாகவே திடீரென தங்கத்தின் விலை குறைவதும் பின்பு அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்வதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கொண்டிருக்கின்றனர். இதனிடையே, தங்கத்தின் விலை குறையுமா என தாய்மார்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய விலையை காட்டிலும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 37,016 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,627 க்கு விற்பனையானது மற்றும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.60.70 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 37,176 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 20 உயர்ந்து ரூ.4,647 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.61.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.