சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் வார இறுதியான இன்று (ஜூலை 2) துவங்கி இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் ஒரு சவரன் நகை அதிரடியாக ரூ.56 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய விற்பனை
சமீப காலங்களாக ராக்கெட் வேகத்திற்கு ஏறிக்கொண்டிருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய விற்பனையிலும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா பரவல் பாதிப்புகள் மற்றும் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக நகை வாங்க எண்ணியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் நகை விலையானது இந்திய சந்தையில் குறைந்தபாடில்லை.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் தங்கநகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைப்பதற்கும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி இனி 15% என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு மூலம் நகைகளுக்கான விற்பனை விலையில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
TNPSC, TNUSRB தேர்வுகளில் தமிழ் வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை – தேர்வர்கள் கோரிக்கை!
இந்த நிலையில், இன்று (ஜூலை 2) காலை துவங்கி இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.38,336 என விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,792 என விற்பனையாகிறது. அதே வேளையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ.1.50 வரை குறைந்து தற்போது ரூ.63.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.