சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
தங்கம் விலை:
நாடு முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் , வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! சுகாதார அமைச்சர் விளக்கம்!
பொதுவாக பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இந்த நேரத்தில் நகை விலை வழக்கத்தை விட அதிகரிக்கிறது. மற்ற நாடுகளில் தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமே ஆனால் இந்தியாவில் தங்கத்தில் நகைகள் அணிவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க நினைப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 – முதல்வர் வழங்கல்!
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.16 குறைந்தது ரூ. 4,514-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.