தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 – முதல்வர் வழங்கல்!

0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 - முதல்வர் வழங்கல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 - முதல்வர் வழங்கல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 – முதல்வர் வழங்கல்!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் குடுடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில், நேற்று அதில், 10 பேருக்கு நிவாரணத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் ஆணை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிடத்திட்ட 10 மாதங்களாக நீடித்த முதல் அலை பாதிப்பு, 2021 ஜனவரி முதல் குறைந்திருந்தது. அனால் மீண்டும் 2021மார்ச் முதல் 2ம் அலையாக பாதிப்புகளை உண்டாக்கியது. இதனால் இதுவரை தமிழகத்தில் 27,31,945 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 26,87,414 பேர் மீண்டும் குணமடைந்துள்ளனர். இருப்பினும், 36,549 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு எச்சரிக்கை!

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேரில் குடும்பங்களுக்கு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து ரூ.50,000 நிவாரண தொகைக்கான காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக வழங்கினார். நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அரசின் அறிக்கையில், தமிழக அரசு தற்போது 2021-2022ம் நிதியாண்டில் இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 83,98.18 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அளித்துள்ளது.

மின் பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மின் வாரியம் அதிரடி!!

தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதற்காக 182.74 கோடி வழங்க அரசு ஆணை அளித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு விரவிக்க நிவாரணம் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்று வைத்திருப்பின் அவர்கள் https://www.tn.gov.in மூலமும், இ- சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் உதவி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!