சென்னையில் 23 நாட்கள் வெளுத்து வாங்கிய கனமழை – வெதர்மேன் ஷாக் ரிப்போர்ட்!
தமிழக தலைநகர் சென்னையில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மொத்தம் 23 நாட்கள் மழை பெய்து உள்ளதாகவும் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மழைப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியது. இத்தகைய சூழலில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் வில்லங்க சான்று விபரங்களை திருத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – புதிய வசதி அறிமுகம்!
மேலும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரமெடுத்தது. இந்த நிலையில் தற்போது அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக்கடலில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஜாவித் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணி 95% நிறைவு! அமைச்சர் விளக்கம்!
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பல வருடங்களுக்கு பிறகு நவம்பர் மாதம் சென்னையில் 1,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. நவம்பர் மாதம் சென்னை நகரத்தில் 23 நாட்கள் மழை பெய்துள்ளது என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு அரிதான நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மழை குறைந்துள்ளதால் சென்னையில் மழை நீரை அகற்றும் பணியை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.