தமிழகத்தில் வில்லங்க சான்று விபரங்களை திருத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களால் பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ள மக்களின் நலன் கருதி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வில்லங்க சான்று திருத்தம்:
இந்த நவீன உலகில் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அலுவலகங்களிலும் உள்ள ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதாவது தொழிநுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலத்தில் காகித வடிவில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதுவே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த முறையில் ஆவணங்கள் பாதுகாப்பானதாக இல்லை என்பதால் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு தற்போது அதுவே பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணி 95% நிறைவு! அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில் இதுவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட வருடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 1975ம் ஆண்டு முதல் இப்போது வரை விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மிகையொப்பமிட்டு ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அவ்வாறு நேரில் சென்று வில்லங்க சான்றிதழில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவரும் நேரில் செல்வதால் நேர விரையம் மற்றும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனால் மக்களின் நலன் கருதி பதிவுத்துறையின் இணையதளத்தில் அட்டவணை தரவு திருத்தம் என்ற முறையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய பதிவாளரால் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.