சென்னை மக்களுக்கு வெளியான புதிய அலர்ட் – குடிநீர் வாரியம் தகவல்!

0
சென்னை மக்களுக்கு வெளியான புதிய அலர்ட் - குடிநீர் வாரியம் தகவல்!

தமிழகத்தில் பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்:

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகமானது குடிநீர் வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் பராமரிப்பு பணிகள் அல்லது முக்கிய காரணங்களினால் மட்டுமே குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துகுழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதனால் மார்ச் 15ஆம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 16ஆம் தேதி அன்று அதிகாலை 2 மணி வரை தாம்பரம், அடையாறு, பெருங்குடி, ஆலந்தூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்னதாக சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு http://cmwssb.tn.கோவி.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீரை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!