சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் – 6 நிலையங்களை அமைக்கும் முடிவு ரத்து!!
சென்னையில் தற்போது 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இருந்து 6 ரயில் நிலையங்களை அமைக்கும் முடிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பணிகள்
சென்னையில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து வசதிகளை எளிதாக்குவதற்காக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பரங்கிமலை – கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வழித்தடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயங்குகிறது. இந்த ரயில் சேவைகள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவைகளை துவங்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம், மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சிறுசேரி போன்ற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 6 ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை கைவிடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம் – 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவு!!
அதன்படி, டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 750 மீட்டருக்கும் குறைவான தூரங்களில் இந்த ரயில் நிலையங்கள் அமைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.