தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம் – 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவு!!
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்வு
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
NEET PG 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் போன்ற உள்மாவட்டங்களில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் சரியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வெப்பம் 101 டிகிரி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.