தமிழகத்தின் 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் 26.01.2022 முதல் 30.01.2022 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த வகையில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் வானிலை தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
26.01.2022 – 27.01.2022 : கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் , திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ,தேனி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
28.01.2022 : தென்தமிழகம் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மமை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
29.01.2022, 30.01.2022: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? சினிமா பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (சென்டிமீட்டர் ) சிவகிரி (தென்காசி) , மேலூர் (மதுரை ) தலா 3 , உசிலம்பட்டி (மதுரை) 2, கோவில்பட்டி (தூத்துக்குடி) 1.
மீனவர்களுக்கு எச்சரிக்கை 28.01.2022, 29.01.2022 மன்னார் வளைகுடா , குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.