சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நாளுக்கு நாள் ஆபரணத் தங்கத்தின் விலை பல மடங்காக உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,568க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.152 அதிகரித்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை பல மடங்காக பெருகி கொண்டே சென்றாலும் நகைப் பிரியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. பெரும்பாலும் இல்லத்தரசிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்பி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைந்ததால் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40ஆயிரத்தை எட்டியது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,568 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,944 க்கு விற்பனையானது.
ExamsDaily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.19 அதிகரித்து ரூ.4,965 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை நேற்று ரூ.71.30 க்கு விற்பனையான நிலையில் இன்று 90 காசு குறைந்து ரூ.71.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியதால் மக்கள் கவலையில் உள்ளனர்.