மூன்றாக பிரியும் தலைநகர் சென்னை – CMDA எடுத்துள்ள அதிரடி முடிவு! விரைவில் முதல்வர் ஆலோசனை!
தமிழக மாவட்டங்களில் ஒன்றான சென்னை, மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. பெருநகரமாக விளங்கும் சென்னையை மூன்றாக பிரிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் விரைவில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தின் தலைநகரான சென்னை இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக சென்னை 5-வது இடத்தை பிடித்து பெரு நகரமாக உருவெடுத்துள்ளது. இங்கு மக்கள் தொகை அதிகம் அதே போல மாநிலத்தின் அதிக பரப்பளவை கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் சென்னையை தாயகமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதனால் மற்ற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் பணிக்காக சென்னையில் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையை வடக்கு, தெற்கு, மத்திய பகுதி என மூன்றாக பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையானது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை 5,904 சதுர கிலோ மீட்டராக உயர்த்த பெருநகர வளர்ச்சி ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சென்னையின் விரிவாக்க பணிகள் குறித்து முதல்வர் அக்டோபர் 5ம் தேதிக்கு பிறகு ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Technical Staff Wanted: தங்கும் வசதியும் உண்டு!!! அக்.06-ம் தேதி நேர்காணல்!!!
Exams Daily Mobile App Download
மேலும் சென்னையை விரிவுபடுத்த புதிய திட்டங்களை தயாரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற பொறியியல் துறை முன்னாள் பேராசிரியர், ‘நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளுடன் ஒரு சுதந்திரமான, நடுநிலையான குழுவை நிறுவி சென்னையை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் தற்போது விரிவாக்க திட்டமிட்டுள்ள பரப்பளவு நடப்பில் உள்ளதை விட 41/2 மடங்கு அதிகம் என்பதால் பெரும் பகுதியை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்