TET தேர்வு ‘இந்த’ பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்து உள்ளது.
முக்கிய உத்தரவு:
கடந்த 2012ம் ஆண்டு, பூந்தமல்லியில் உள்ள கரையாஞ்சாவடி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளியில் உதவியாளராக( B.T Assistant – Maths) பணிபுரியும் ஆனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.சி.எம் சிறுபான்மை பள்ளியில் பள்ளி உதவியாசிரியராக நியமனம் செய்யப்பட்ட 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இப்பள்ளி கடந்த 2016ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம், மனிதாரரை மீண்டும் உதவியாசிரியராக நியமித்தது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் 2013 முதல் 2016 வரை ஊதிய உயர்வும் மனுதாரர் வாங்கியுள்ளார். மேலும், 2016ம் ஆண்டு தனது இரண்டாவது குழந்தை பிறக்கும் போது ஆறு மாத மகப்பேறு விடுமுறைக்கு பள்ளி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது சம்பளம் மற்றும் அனைத்துப் பணிச் சலுகைகளையும் நிறுத்தி வைக்க திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் (டிஇஓ) உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் தனக்கு வழங்கப்பட்ட இன்கிரிமெண்ட்களை திரும்பப் பெற வேண்டும், வருடாந்திர இன்கிரிமெண்ட் மற்றும் மகப்பேறு விடுப்பு சலுகைகளை வழங்க கூடாது போன்ற மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் (ஓய்வு பெறும் வரை) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டம், 2009இன் படி TET தகுதிக்கான பரிந்துரை, சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. மனுதாரர் பணிபுரிந்த பள்ளி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாகும். எனவே TET தேர்வு அந்த கல்வி நிறுவனத்திற்கு பொருந்தாது என குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி 2017ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் மனுதாரருக்கு சேர வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வுகளை உடனே திரும்ப வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பணப்பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சட்டவிரோதமாக கருதி, 4 வாரங்களில் அவைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.