PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0

PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் திட்டமாக பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழே ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது குறித்து முழு விவரத்தையும் கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 பிப்ரவரி 24, அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும்,மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதற்காக செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்க படுகிறது. அதனை தொடர்ந்து வருடம்தோறும் 3 முறை தவணையாக 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசின் இந்த திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு!

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 11 வது தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தவணை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்குள் வரும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயம் என்றும், தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோமெட்ரிக் பதிவை செய்து கொள்ளுமாறு பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதை செய்யாமல் இருந்தால் பணம் வராது என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இது குறித்து விளக்கங்களை தெரிந்து கொள்ள https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்றும் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் தற்போது, விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. அதே சமயம், கடந்த மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியது. அதன்படி இந்த ஆண்டிலும் மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!