அரசுப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்ட வழக்கில் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
கடலூர் மாவட்டம் இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சாந்தி என்பவர், அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சிவக்குமார் தன்னை சாதி பெயரை கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆசிரியர் சிவகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அரசு பள்ளிகளில் சத்துணவில் தினை வகைகள் சேர்க்க முடிவு – பிரபல நிறுவனத்தின் சூப்பரான திட்டம்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதுவரை, அந்த ஆசிரியர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.