சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு – நகைப்பிரியர்கள் கொண்டாட்டம்!
சென்னையில் வணிக சந்தையின் நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலக அளவில் தங்கம் அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர வர்கத்தினர் வரை அனைவருக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர்.
TCS, Infosys, Wipro நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் & பதவி உயர்வு – தக்கவைக்க புதிய திட்டம்!
எனவே ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் சாமானியர்கள் நகை வாங்க முடியாத நிலை நிலவியது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் இருக்கும் சாதாரண நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.
தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!
தற்போது பண்டிகை நாட்கள் வரவிருப்பதால் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.35,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,456-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.