சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.368 அதிகரிப்பு!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.368 உயர்ந்து சவரன் ரூ.36,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்வு
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுக்காப்பான முறையில் கவனம் செலுத்த தொடங்கின. அதனால் பங்கு சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது முதலீடுகளை செலுத்த தொடங்கின. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்தது. அதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை – மக்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தற்போது கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டு வந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46 உயர்ந்து ரூ.4,542-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை – பட்டியல் வெளியீடு!
இதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.10 பைசா அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.90 – க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.67,900 – க்கும் விற்கப்படுகிறது. அதனால் சாதாரண மக்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி கடைகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தங்க மற்றும் வெள்ளி வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.