தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை – மக்கள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை - மக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை - மக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை – மக்கள் எதிர்பார்ப்பு!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரமெடுத்து வருகிறது. இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவாரண தொகை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வருடங்களில் இல்லாத அளவு இந்த வருடம் அதிக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரவு பகலாக இடைவிடாது. பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. பலர் உடைமைகளை, விளைபொருட்களை இழந்து தவித்து வருகின்றனர்

மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை – பட்டியல் வெளியீடு!

மேலும் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்ததால் மழைநீர் வடியாமல் தேங்கி நோய் பரவும் அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சரிடம் 2,079 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 22, 23 ஆகிய தேதிகளில் உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

மேலும் ஆய்வு குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடற்‌ பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மீண்டும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!