சென்னை: மாலை நிலவரத்திலும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்கத்தின் விலை நிலவரங்கள் குறித்து கீழே உள்ள பதிவில் காணலாம்.
தங்கம் விலை:
உலகில் தங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இது மட்டுமின்றி ஒரு நாட்டில் உள்ள தங்கத்தை வைத்துத்தான் பணம் அச்சிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் இரண்டு வருடங்களாக பணவீக்கம், விலைவாசி உயர்வு, போன்றவற்றால் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மக்களிடையே வேலையின்மையால் வறுமை அதிகரிக்க தொடங்கியது. இதை தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உக்ரைன்- ரஷ்ய போரின் தாக்கத்தினால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
PM Kisan திட்ட பயனாளிகளுக்கான புதிய அப்டேட் – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ. ரூ.38,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.40 குறைந்து ரூ.63.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.