PM Kisan திட்ட பயனாளிகளுக்கான புதிய அப்டேட் – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 12வது தவணை வருகிற நவம்பர் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இத்திட்ட பயனாளிகளுக்கு புதிய அப்டேட் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
PM Kisan
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையின் மூலமாக பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 11வது தவணை வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த 11வது தவணை கடந்த மே 31ம் தேதி அன்று விடுவிக்கப்பட்டது. இத்திட்ட பயனாளிகள் தங்களுக்கு கிடைத்துள்ள பண வரவுகளை pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் சென்று புதிய அறிவிப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை எளிமைப்படுத்தும் விதமாக தற்போது விவசாயிகளின் மொபைல் எண்ணின் மூலமாக தெரிந்து கொள்ள வசதிகளை கொண்டு வந்துள்ளது. இதற்கு பயனாளிகள் தங்களின் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்தால் போதுமானது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்போருக்கு முக்கிய தகவல் – ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள்:
1. இதற்கு முதலில் Pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதில் பயனாளிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்பு புதிய பக்கம் திறக்கும்.
3. அதில் விவசாயி தங்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அதாவது பதிவு எண் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
4. இறுதியாக திரையில் தோன்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
5. இப்போது உங்களின் கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிடும்.