குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

0
குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க சென்னை குடிநீர் வாரியத்தின் புகார் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது.

புகார் எண்:

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் மக்கள் நெடுந்தொலைவு சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அதே போல மழைக்காலங்களில் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதும் வழக்கமாக உள்ளது. எப்போதும் பருவமழையின் போது சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. இந்த கழிவு நீரால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், பல வித தொற்று நோய்களுக்கு ஆளாகியும் அவதிப்படுகின்றனர்.

WhatsApp பயனாளர்கள் கவனத்திற்கு – Call Link உருவாக்கலாம்! அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

இத்தகைய சூழலில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறினர். இதனை கருத்தில் கொண்டு தற்போது சென்னை மாநகராட்சி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் தொடர்பாக குடி நீர் வாரியத்தின் 044 4567 4567 மற்றும் 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!