தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் – கல்வித்துறை முனைப்பு!

0
தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் - கல்வித்துறை முனைப்பு!
தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் - கல்வித்துறை முனைப்பு!
தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் – கல்வித்துறை முனைப்பு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12,11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மே மாதத்தில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான அனைத்து ஏற்படுபாடுகளும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முதன் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்பிறகு நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா 3ம் அலை பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

அடுத்த வாரம் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை சந்திக்க தயார்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புகளுக்கு தொடங்க இருக்கிறது. ராமநாதபுரத்தில் பிளஸ்2 தேர்வு எழுதுவோருக்காக 61 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கல்வி மாவட்ட வாரியாக ராமநாதபுரம் 19, பரமக்குடி 20, மண்டபம் 22 என மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 14,956 பேர் எழுத உள்ளதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,790 மாணவர்கள், 7,994 மாணவிகள் என மொத்தம் 15,764பேர் எழுதுகின்றனர். 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,658 மாணவர்களும், 8,536 மாணவியரும் என மொத்தம் 17,194 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு 79 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கல்வி மாவட்டம் வாரியாக ராமநாதபுரத்தில் 25, பரமக்குடியில் 25, மண்டபம் 29 என தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!