Chatgpt : நடைமுறையில் இருக்கும் பலவகையான வேலைகள் நீங்கும் – OpenAI CEO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Chat GPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பல வகையான மனித வேலைகளை செய்யும் திறன் கொண்டது. இதனால் வேலைவாய்ப்பு இழப்பு நேரக்கூடும் என்ற அச்சத்தில் இருக்கும் சமயத்தில், OpenAI CEO அதிகாரி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Chatgpt:
Chat GPT என்னும் (Online Chatbot) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆனது பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு மனிதர்கள் பதிலளிப்பது போன்று கட்டுரை வடிவில் விரிவான பதில்களை கொடுக்கும் திறன் கொண்டது. இதனை பயன்படுத்தி சுமார் 20 வகையான மனித வேலைகளை செய்ய முடியும். இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதுமட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சிந்தனை திறனை வளர்த்து கொள்ள தடையாக உள்ளது. மேலும் தற்போது, மேம்படுத்தப்பட்ட Chat GPT4 என்பதையும் OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக உங்களால் திரைப்படக்கதைகள், சந்தைப்படுத்துதலுக்கான யுக்திகள் உள்ளிட்ட பலவற்றையும் பெற முடியும்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், OpenAI CEO தெரிவித்துள்ளதாவது, Chat GPT மென்பொருள் தற்போது நடைமுறையில் இருக்கும் பல வகையான வேலைகளை நீக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த மென்பொருள் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை விட மிஞ்சுவதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் Chat GPT மென்பொருள் விரைவில் கல்வித்துறைக்கு பயன்படும் வகையில் மாறக்கூடும் என்றும் கூறியுள்ளார்.