தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திடீர் மழை:

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியது முதல் பகல் நேரத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், வரும் மாதங்களில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 45,000 வேலைவாய்ப்பு – ரூ.14 லட்சம் வரை சம்பளம்!

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தை சற்று தணிக்கும் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று (மார்ச் 20) தமிழகத்தில் மாலை 5:30 மணி நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ராமநாதபுரம்,கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!