செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 45,000 வேலைவாய்ப்பு – ரூ.14 லட்சம் வரை சம்பளம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்பு இருந்து வருகிறது. தற்போது 45,000 வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
நாட்டிலுள்ள பல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை குறைத்து வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த வருடம் மட்டுமே AI இன்ஜினியர்களுக்கு 45,000 வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 8 வருட AI மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் அனுபவம் இருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலும் சம்பளம் வாங்கி கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பெண்கள்!
மேலும், தரவுப் பொறியாளர்கள், வணிக நுண்ணறிவு (BI) ஆய்வாளர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் ஆகியோர்களுக்கு ஆண்டுக்கு ரூ.14 லட்சம் வரையிலும், ML பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், முன் அனுபவம் இல்லாத develop இன்ஜினியர்கள், டேட்டா ஆர்கிடெக்ட்கள் மற்றும் டேட்டாபேஸ் அட்மின் ஆகியோர்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலும் சம்பளம் வழங்கப்படலாம் என டீம்லீஸ் டிஜிட்டலின் தலைமை வணிக அதிகாரி சிவ பிரசாத் நந்தூரி கூறியுள்ளார்.