ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண விதிகளில் மாற்றம்!
இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ICICI வங்கி:
நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பு செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ரிசர்வ் வங்கி அவ்வவ்போது வங்கிகளின் விதிமுறைகளையும், பண பரிவர்த்தனை முறைகளையும் மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது 2022ம் ஆண்டு முதல் ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டு மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி – 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை விடுமுறை!
மேலும் மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதனை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு விவரங்களை பாதுகாக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களை தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தின் படி கட்டணமாக 2.50% செலுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் 500 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை
ஐசிஐசிஐ வங்கியின் எமரால்டு கார்டினை தவிர மற்ற அனைத்து கார்டுகளுக்கும் தாமதமாக செலுத்தும் தவணைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தவணை தொகை 100 ரூபாயாக இருந்தால் கட்டணம் கிடையாது. அதை தாண்டும் போது கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணத்துடன் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு கட்டண உயர்வானது வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.