தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் – புதிய அனுமதிகள் வழங்கல்!

0
தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் - புதிய அனுமதிகள் வழங்கல்!
தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் - புதிய அனுமதிகள் வழங்கல்!
தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் – புதிய அனுமதிகள் வழங்கல்!

தமிழகத்தில் பிப்ரவரி1 ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் வரும் 16 ஆம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் காரணமாக பள்ளி,கல்லூரிகள் ஜனவரி 31 வரை விடுமுறை அளித்தது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. இருப்பினும் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பதாகவும் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, கல்லூரிகள் திறப்பு என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாக அதிகாரிகள், தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வு குறித்த புதிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!