Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான மற்றும் ஆபத்து இல்லாத வகையில் சேமிக்க முடிவு செய்தனர். இதில் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஏராளமான மக்கள் சேமிக்க தொடங்கினர். அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வு குறித்த புதிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!

அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட அதிகளவு இணைகின்றனர். தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். மேலும் இதில் முதலீடு செய்வதால் வரி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஷாக் – திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் லீக்? தீவிர விசாரணை!

இந்த திட்டத்தில் 25 வயதுடைய நபர் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சேமித்து 4500 ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வருகிறார். அதன்படி ஒரு ஆண்டுக்கு 54000 ரூபாய் வரை செலுத்து வேண்டும். இதன் முதிர்வு காலத்தின் முடிவில் 10.80 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். அதன்படி 20 ஆண்டுகால முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு 20 லட்ச ரூபாய் வரை பெற முடியும். இவ்வாறு முதலீடு செய்த பணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கிடைப்பதால் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமைகிறது. அதனால் இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!