தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதனுடன் பொதுத்தேர்வு தொடங்கும் தேதியிலும் மாற்றங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றம்
நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் 13ம் தேதியன்று புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், 2022-23ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என்ற விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையதளம் வழியாக சான்றிதழ்களை வழங்கும் திட்டம் நடந்தது.
Exams Daily Mobile App Download
இதில், புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு மார்ச் 13ம் தேதியன்றும், 11ம் வகுப்புக்கு மார்ச் 14ம் தேதியும், 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 3ம் தேதியும் துவங்கும். தேவை ஏற்பட்டால் வரும் கல்வியாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கருணை மதிப்பெண் உண்டா?
பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்குவதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும். அதன்படி மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும். வகுப்புகள் 9 மணிக்கு தொடங்கும். பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.