பள்ளி மாணவர்களின் கல்வி கொள்கையில் மாற்றம்? தமிழக அரசின் முடிவு!

0
பள்ளி மாணவர்களின் கல்வி கொள்கையில் மாற்றம்? தமிழக அரசின் முடிவு!
பள்ளி மாணவர்களின் கல்வி கொள்கையில் மாற்றம்? தமிழக அரசின் முடிவு!
பள்ளி மாணவர்களின் கல்வி கொள்கையில் மாற்றம்? தமிழக அரசின் முடிவு!

மாநில கல்வி கொள்கையின் குழுவின் முதல் கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் சார்பில் தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் இது குறித்த முழு விவரங்களை காண்போம்.

கல்விக்கொள்கை

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் வகையில் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் கல்வி முறை 2010 முதல் 2011 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, தற்போது முக. ஸ்டாலின் தலைமையில் மாநில கல்விக் கொள்கை முதல் கூட்டம் இன்று தொடங்கி உள்ளது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பாடத்திட்டங்களில் இருந்து மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டத்தை வடிவமைப்பது, மாநில மொழி குறித்து , வரலாற்றுக்கு ஏற்ற வகையில் கொள்கையை வடிவமைப்பது ஆகிய கொள்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்? விரைவில் நடவடிக்கை!

இந்த கூட்டத்தின் உறுப்பினர்களாக, மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இராம சீனுவாசன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சவிதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமானுஜம், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா.பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என அறியப்படுகிறது. மேலும், எதிர்கால தேவைக்கேற்ப மாநிலத்துக்கான
தனித்துவமான கல்விக் கொள்கையை தயார் செய்வதற்கு கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் குறித்து முதல்வருடன் இக்குழு விவரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!