கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதியில் மாற்றம்? பல்கலைக்கழக அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வுக்கான மறுதேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி விட்டு தேர்வுகளை மட்டும் நேரடி முறையில் நடத்துவது சரியில்லை அதனால் மீண்டும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Exams Daily Mobile App Download
இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியது. தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு ஜூன் 2-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மேலும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.
பணி ஓய்வு பெறும் வயது உயர்வு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்! மாநில அரசின் முக்கிய முடிவு!
அதன்படி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேர்வு குறித்த சுற்றறிக்கை அனுப்பட்டது. இந்த நிலையில் திடீரென தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.