பணி ஓய்வு பெறும் வயது உயர்வு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்! மாநில அரசின் முக்கிய முடிவு!

0
பணி ஓய்வு பெறும் வயது உயர்வு - மகிழ்ச்சியில் ஊழியர்கள்! மாநில அரசின் முக்கிய முடிவு!
பணி ஓய்வு பெறும் வயது உயர்வு - மகிழ்ச்சியில் ஊழியர்கள்! மாநில அரசின் முக்கிய முடிவு!
பணி ஓய்வு பெறும் வயது உயர்வு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்! மாநில அரசின் முக்கிய முடிவு!

கேரள மாநிலத்தில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியில் உள்ளனர். அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

பணி ஓய்வு வயது உயர்வு:

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில், 60 ஆகவும் இருக்கிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56ல் இருந்து 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு தற்போது திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கேரளாவில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் நிரந்தரப்பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு படி, 2022 ஏப் 1 முதல் இந்த உத்தரவு அமலானது. இந்தியாவில் வாசனை திரவிய பொருட்கள் சாகுபடி செய்யும் மாநிலமாக கேரளா உள்ளது. இங்குள்ள இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு போன்ற மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் தேயிலை, காபி, ஏலக்காய், ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை – மாத ஊதியம்:ரூ.25,000/-

மேலும் மூணாறில் 15 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இதை அடுத்து பிரபல தனியார் தேயிலை கம்பெனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் தொழிலாளர்களை இருந்து அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த ஒய்வு வயது உயர்வு உத்தரவால் ஓய்வு பெறுவோரை மீண்டும் பணி அமர்த்துகின்றனர். குறிப்பாக தமிழக பூர்வீக தொழிலாளர்கள் அதிகமானோருக்கு தமிழகம், கேரளாவில் வீடுகள் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது நிர்வாகத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒப்படைத்தால் மட்டுமே ஓய்வூதியம் உட்பட சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!