CBSEல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வில் மாற்றம் – முக்கிய தகவல்!
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களையும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வுகளை முன்பு போலவே நடத்துவது குறித்தும் சிபிஎஸ்இ வாரியம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ வாரியம் :
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டு காலமாக வேகமெடுத்து பரவிய கொரோனா பெருந்தொற்றால் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் தற்போது தான் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ வாரியம் நடப்பு கல்வியாண்டுக்கான மாற்றங்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா முதல் அலை (2020) மற்றும் இரண்டாவது அலை (2021) என இரண்டு ஆண்டுகளிலும் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது கொரோனா நோய்த் தொற்று முழுமையாக நீங்க வில்லை என்றாலும், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் அத்தகைய எதிர்பாராத சூழல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு 2021 -2022 ஆம் கல்வியாண்டுக்கான பொது தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ வாரியம் நடத்தியது. இவ்வாறு இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assessment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூலை 22ல் தேர்வு முடிவுகள் வெளியாகியது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு
இதனையடுத்து, இரண்டு அமர்வுகள் கொண்ட இந்த தேர்வு முறையை நடப்பு கல்வியாண்டில் கைவிடும் விதமாக முந்தைய ஆண்டுகளில் இருந்தது போல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ வாரியம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 30% குறைக்கும் விதமாக சில பாடங்களில் இருந்து பல அத்தியாயங்கள் மற்றும் அலகுகள் அகற்றப்பட்டு, மீதமுள்ள பாடங்களை அப்படியே மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ள cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.