ஆதார் கார்டு செல்லாமல் போக வாய்ப்பு? தெரிந்து கொள்வது எப்படி! முழு விவரங்கள் இதோ!
ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண்ணை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதால் சில ஆதார் கார்டை அரசு செயலிழக்க வைத்து விட்டது. எனவே, உங்களது ஆதார் கார்டும் செயலிந்துவிட்டதா என்பதை கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு
இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் கார்டு தான் முக்கிய அங்க அடையாளமாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இத்தகைய ஆதார் கார்டில் உங்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகிய அனைத்துமே சரியாக இருக்க வேண்டும். மேலும், இந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இணைக்கும் போது பல நன்மைகள் கிடைக்கிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செயல்பாட்டிற்கு வரும் புதிய வசதி!
மேலும், ஆதார் கார்டு ஒரு நபர் உயிரோடு இருக்கும் வரைக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அந்த நபர் இறந்துவிட்டால் ஆதார் அட்டை செல்லாது. மேலும், பலரும் ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண்ணை வைத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஒரே பெயரில் 2 அல்லது 3 ஆதார் கார்டுகள் பதிவாகியிருந்த நிலையில் அந்த ஆதார் கார்டினை அரசு ரத்து செய்து விட்டது. மேலும், நம்பகத்தன்மை காரணமாகவும் பல ஆதார் அட்டைகளை அரசு செயலிழக்க செய்துவிட்டது.
Exams Daily Mobile App Download
இது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவசியமில்லாமல் யாரிடமும் உங்களது ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண்ணை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களது ஆதார் கார்டினை அரசு செயலிழக்க செய்துவிட்டதா என்பதை ஆன்லைன் மூலமாகவே சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது, முதலில் UIDAIன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Verify Aadhar number என்கிற பகுதியை கிளிக் செய்யவும். இதன் மூலமாகவே ஆதார் கார்டினை அரசு செயலிழக்க செய்துவிட்டதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.