தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழ்நாடில் இன்று (அக்.16) மதுரை, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!
அதனை தொடர்ந்து அக்.17,18 ஆகிய இரு தினங்களும் புதுக்கோட்டை, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், தென்காசி,சிவகங்கை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ,தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அக். 19 அன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, அரியலூர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அக். 16, 17 ஆகிய தேதிகளில் லட்ச தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்